Total Pageviews

Sunday, December 21, 2014

கொய்யாவின் மருத்துவக் குணங்கள் :-



கொய்யாவின் மருத்துவக் குணங்கள் :-
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
* வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.
* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.
* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.
* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

SUGA Green Services promoting in Tirunelveli 90 acres - Green Estate for planting and growing trees


We are pleased to inform you that we are making this green project to make Mother Earth more green...


For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services


Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

Sunday, December 7, 2014

வானகம் பண்ணையில் 3 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி - வருகிற 2014, டிசம்பர் 12 முதல் 14 வரை வானகம் பண்ணையில் மூன்று நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி...



வானகம் பண்ணையில் 3 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி :

வணக்கம்,
வருகிற 2014, டிசம்பர் 12 முதல் 14 வரை வானகம் பண்ணையில் மூன்று நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெற உள்ளது . பயிற்சி 12ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் துவங்கி 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நிறைவடையும்.

பயிற்சியில் இயற்கை வழி வேளாண்மை, இயற்கை வழி மருத்துவம், தேனீ வளர்ப்பு, சிறுதானியம்,, பூச்சி நண்பன் , மாடி வீட்டுத்தோட்டம் & இயற்கை வேளாண் அடிப்படைகள் மற்றும் பல.... இடம் பெறும்.

பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

பயிற்சியை வானகம் கல்வி குழுவினர் மற்றும் தொண்டர் படையினர் வழங்குவார்கள்.

பயிற்சி குறித்த நேரத்தில் நடைபெறும்.
பயிற்சி நன்கொடை : ரூ.1200/- மட்டுமே.
உணவு, தங்குமிடம், சான்று வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :
வங்கி கணக்கு எண் :

Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Bank Contact No : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in

( அல்லது )

பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய
மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311

முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு: 95666 67708, 94880 55546, 84897 50624
பயிற்சியின் முடிவில் நம்மாழ்வார் ஐயா எழுதிய
1. புத்தகங்கள்
2. செய்முறை விளக்கங்களுடன் கூடிய குறுந்தகடுகள்
3. ஆவணப்படம்
4. வானகம் மாத இதழ்
5. சத்துமிகு தானியங்களான வரகு, குதிரைவாலி, கம்பு, போன்றவைகள்
6. மூலிகை தேநீர் போன்ற பொருள்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். அவற்றில் உங்களுக்குத் தேவையான பொருள்கள் வேண்டுமெனில் விலைக்கு வாங்கி செல்லலாம்

இயற்கை – உயிர்ச் சங்கிலி - நம்மவரு நம்மாழ்வார்… பகுதி 1



நம்மவரு நம்மாழ்வார்… பகுதி 1
=================================

இயற்கை – உயிர்ச் சங்கிலி :
-------------------------------------------

இயற்கையெல்லாம் செயற்கையாய் நாம் மாற்றிக் கொண்டிருக்கும் காலத்தில், தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதுகளில் வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், உண்மையில் நம் உள்ளங்களை ஆள்பவர் தான். இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, நாம் இயற்கைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அச்சுறுத்தல் என்று பல பரிமாணங்களை வரும் வாரங்களில் நம்முடன் அலசுகிறார். இந்தப் பக்கத்தில் எங்களுடன் தொடர்பில் இருங்கள்…

ஒவ்வொரு வாரமும் நாம் என்ன செய்ய முடியும், தனியொரு மனிதராய் இந்த சமுதாயத்தில் நம்மால் என்ன மாற்றங்களை உண்டு பண்ண முடியும் என்பதனை இங்கே கமென்டுகளாக எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஆம் நாம் கை கோர்போம், நம் சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மனிதன் துணிந்தால், அற்புதங்கள் சாத்தியமே!

நம்மாழ்வார்:
--------------------

பாரம்பரியமாக நமது தேசத்தில் இருந்து வந்த மருத்துவ முறைகளுக்கு பெரும் உதவி புரிந்தவை மூலிகைகள். அவை மிகவும் புனிதமானதாகப் போற்றப்பட்டன. தற்போது தீராத நோய்களாகக் கருதப்படும் நோய்களை போக்கும் சக்தி கொண்டவை இந்த மூலிகைகள்.

ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விளை நிலங்களில் இறைத்து, மண்ணின் தன்மையையே மாசுபடுத்தி விட்டோம். இதனால் நிலங்களில் விளையும் பயிர்களும் வேலியோரங்களில் வளரும் மூலிகைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
அதேபோல நாம் விளைவித்த சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கால்நடைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

உதாராணமாக
மாடுகள்… மனிதர்களின் வாழ்வில் மாடுகளின் பங்களிப்பு மிக இன்றியமையாதது. வயற்காட்டில் ஏர் உழ, நீர் இறைக்க, வண்டியை இழுக்க எனப் பலவிதங்களிலும் உழைப்பதோடு
விளைச்சலுக்குத் தேவையான எருவினையும், உண்ண உணவினையும் (பாலாக) மாடுகள் வழங்குகின்றன.

ஒவ்வொரு உயிரும் பிறவற்றைச் சார்ந்தே வாழ்கிறது என்பதை ஆன்மீக ரீதியாகவே உணர முடியும். வெறும் அறிவியல்ரீதியாக மட்டுமே பார்த்தால் அது அழிவினை நோக்கியே இட்டுச் செல்லும். அறிவியலின் உச்சம் அழிவுதான். அணுகுண்டு அப்படித்தான் உருவானது. ஆன்மீகரீதியில பார்க்கும்போது மனிதர்களின் நலனை மட்டும் பார்த்தால் போதாது. அது மிகவும் குறுகலான பார்வை. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என மனிதனை மட்டும் உயிராகப் பார்க்காமல் எல்லாவற்றையும் நம்மோடு அரவணைத்துக் கொள்வதே… ஆன்மீகப் பார்வை.

மனிதனைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடிகளும், கால்நடைகளும், பறவைகளும் என அனைத்தும் நலமாய் வாழ்வதற்குரிய சூழல் இந்த பூமியில் இருக்க வேண்டும். இவை ஒவ்வொன்றின் நலவாழ்வும் மற்ற உயிரினங்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்தவை என்பது விஞ்ஞானரீதியாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு ஆந்தைக்கு உணவாக மூன்று எலிகள் தேவை. அந்த எலிகளை ஆந்தை சாப்பிடுவதால்தான் நீங்கள் சேகரித்து வைத்துள்ள உணவு பாதுகாக்கப்படுகிறது. பூமியில் பல நுண்ணுயிர்கள் இருப்பதால்தான், நிலம் வளமாகி விளைச்சல் பெருகுகிறது. இவ்வாறாக அனைத்தையும் ஒரே சமூகமாகப் பார்க்கும் பார்வை நமக்குத் தேவை.

நம்மாழ்வார் கூறும் சமூகப் பார்வையின் தொடர்ச்சியை வரும் வாரங்களில் பதிவோம்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்




இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்

இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் 

1. நெஞ்சு சளி 
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தைஅழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்... மரம் வளர்ப்போம்...




மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........, அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தைஅழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.

http://suga-green-services.blogspot.in/2014/12/blog-post.html

Thursday, November 27, 2014

Wanted Student Counselor for the famous software training institute in chennai

Wanted  Student Counselor for the famous software training institute in chennai


Education Qualification: Any degree

Experience                      : 6month to 2 years

Salary                              : 1.20 lakhs to 2 lakhs

Skills                             : Good Communication skills , Basic computer knowledge, Convincing skills


You may forward this to your friends and relatives who require similar jobs.

Interested Candidates may send resume to:


 nsugavanam@gmail.com or


sugaemployment@gmail.com         career@sugaconsulting.in


Contact N.Sugavanam. SUGA EMPLOYMENT Services,


( a Division of SUGA Consulting Services),


Office No,26, TNHB Complex, Luz Golden Enclave, Ground Floor,

180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Behind Luz Pillaiyar Temple, Behind 'MAX' Show Room


Mobile: Airtel: 99400-58497, Vodafone: 91768-71191,


 91766-11627, 91762-44979, BSNL: 9445437117


http://www.facebook.com/pages/Chennai-Jobs/173094996100021

http://suga-employment-services.blogspot.com/


பாகற்காயின் மருத்துவக் குணங்கள்....



பாகற்காயின் மருத்துவக் குணங்கள்....
கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்…
* அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.
* குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.
* பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது.
* ‘பாலிபெப்டைடு-பி’ எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் ‘இன்சுலின்’ என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.
* உடற்செயலின் போது ‘சாரான்டின்’ எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது. சாரான்டினானது குளு கோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் ‘டைப்-2′ நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய்.
* பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும்.
* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.
* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும்.
* ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும்.
* வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.
* பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றna.

Thursday, September 11, 2014

நீங்கள் நடும் மரங்கள் நாளை உலகிற்கு சோறு போடும்... வாருங்கள்...




Neengal nadum marangal naalai ulagirku soru podum... Vaarungal... 

நீங்கள் நடும் மரங்கள் நாளை உலகிற்கு சோறு போடும்... வாருங்கள்... 

 http://suga-green-services.blogspot.in/

Wednesday, September 3, 2014

மனம் வருந்தவில்லை மங்கையர் சூடாததற்காக எருக்கம் பூ….



மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாததற்காக
எருக்கம் பூ….

எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்..

எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்…..

இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்….

இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.

பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.

இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.

காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும். இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும். இலைகளையும்,பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை,கால் பகுதிகளை முக்கி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம்.

எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.

பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.

எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..

தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாûலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.

மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது.

Mind not regret
For women cutatatark
Erukkam flower ....

Er plant will grow in many places parkkirem. Its medicinal properties ..

Manures, leaf, flower, root, milk is fraught with medical properties. Build erukkam fry the leaves, brown lumps break. Manures are usually on the order of 4-5 leaves ripe ripening brick stack heel, the heel to compress the gas shall tread down .....

Keep dry leaves burning, the smoke coming from the nose, pull, decrease problems such as asthma, cough ....

Pilintetutta fry leaf extract grabbing, nose 4 - 6 drops, rather than dissolve the thick mucous that is locked inside. This morning, evening alavumikamal than attentive, sneeze, causing mukkataippai delete.

Juice of ripe leaves, mixed with oil, leave Earache katinul warmer, ear problems, such as deafness is likely to be fleeting.

Bundle of leaves, heater, warm chest and abdominal areas where pain caused by the decrease in the dressings.

Potittu dried leaves, scattered over sores, they heal quickly. Boil the leaf extract of turmeric powder mixed with katukenney of the skin caused by eczema, rash, prior to the rash, rapid healing. Leaves, flowers and water boiled together GUINEA WORMA rid of the worms, the affected arm, leg and put in main areas. சுத்தப்படுத்தலாம் paying intestine through the anus.

Ventetutta mixed with water and pinch off the flowers erukkam potittu rosewood dressing eat in the morning and evening on an empty stomach, kustam lessen the impact of the deadly disease.

Jiranakari good one flower. Cough, sputum ataippin caused by asthma, syphilis can affect organs, konoriyo cure such problems. The application gives good results in cholera abuse.

Erukkam sweaty skin with hot water and ground vilut eat, fat inside the body, removing sweat to replicate. If eaten in large quantities can cause vomiting. Verttolai with rice porridge made from carved elephant parritalam of the disease ..

Û Pop Idol to apply manure in place of scorpion bite will be reduced immediately. It can be used like a snake katiyilum.

Erukkampalai yellow powder mixed with black in the face, discoloration prior to the arrival of the good parts.

Tuesday, September 2, 2014

கொஞ்சம் முலிகை செடிகளின் விபரங்கள்.....




கொஞ்சம் முலிகை செடிகளின் விபரங்கள்
பவளமல்லி
இலை, வேர்பட்டை
முதுகு வலி ,சுரம், மண்டை கரப்பான்
பிரண்டை
தண்டு, இலை
தலைவலி , செரியாமை
எலும்பு முறிவு
நிலவேம்பு
வேர், இலை
சுரம், மயக்கம் , நீரழிவு
பரவட்டை
இலை, வேர்
வந்சுரம், சீதகடுப்பு சுவைஇன்மை
ஊமத்தை
இலை, கனி
தோல் நோய் ,புண், நரம்பு சிலந்தி, மூச்சடைப்பு
தூதுவளை
இலை, கனி
ஆஸ்துமா ,இருமல், மந்தம், ஆண்மை குறைவு
திப்பிலி
வேர், கனி
ஈளை, பாண்டு ,நீரேற்றம் ,விந்து கட்டுதல்
சர்க்கரை துளசி
இலை
சர்க்கரை நோய்
புளியாரை
இலை
மயக்கம், கழிச்சல் ,மூலம், குறித்தி கழிச்சல்
திருநீற்று பச்சிலை
இலை, விதை
தலைவலி, தோல் நோய்
கரும்புள்ளி
வல்லாரை
சமூலம்,
வாய்ப்புண் , கழிச்சல் ,வயற்று கடுப்பு
வெள்ளை விஷ்ணு கரந்தை
சமூலம்,
காயகற்பம்
சின்னி
இலை, வேர்
சிலந்தி, கனசுரம்
நாய் கடுகு
இலை,கனி
வயற்று பொருமல் புழு கொடைச்சல்
அம்மன் பச்சை அரிசி
பால் ,இலை
பாலுண்ணி ,புண், உதடு வெடிப்பு
புலிச்சுவடி
இலை வேர்
கழிச்சல் உண்டாக்கி , கொப்பளம், நாய்கடி
புளிநாளை
இலை கிழங்கு
சிறு கர்ப்பன், மூளை மூலம் குருதி குன்மம்
ஓடிவடக்கி
சமூலம்
எலும்பு முறிவு , வாத நோய்
தண்ணீர் விட்டான் கிழங்கு
கிழங்கு
நீரழிவு ,ஆண்மை குறைவு செரியாக்கழிசல்
கற்பூரவல்லி
இலை
இருமல்,இரைப்பு,நெஞ்சுகோழை
தும்பை
இலை, மலர்
சுரம்,கண்நோய் ,தோல்நோய்,பாம்புகடி
தங்க அரளி
பட்டை
மூளைசுரம்,நீர் மலம் போக்கி
கீழா நெல்லி
சமூலம்
ஈரல் தேற்றி, நீரழிவு,மஞ்சகாமாலை , சூலை
புன்னை
விதை, எண்ணெய், பூ,பட்டை
மேகம், கரப்பான்,புண்,வாத நோய்
இம்பூரல்
சமூலம்
குருதி வாந்தி, கோழை, இருமல், இரைப்பு
வெள்ளை கரிசாலை
சமூலம்
நரை, திரை, கலீறல் வீக்கம்,மஞ்சகாமாலை
கச் சோளம்
மட்ட்நீலதண்டு
இருமல்,பெருநோய் ,குளியல் பொடி
குப்பைமேனி
இருமல்,வயற்று புழு , சொரிசெரங்கு
ரனகள்ளி
இலை
புண், கொப்பளம், பூச்சி கடி
கருந்துளசி
இலை
இருமல், விஷ சுரம்

Friday, August 22, 2014

Chennai Tree Seed Collection & Showering (Vidhai Abhisegam) on Tirusulam Hills, Opp. to Tirusulam Railway Station, Opp. to Chennai Air Port, Tirusulam, Meenambakkam, Chennai, Tamil Nadu, India...




You are Invited...
Chennai Tree Seed Collection & Showering (Vidhai Abhisegam) on Tirusulam Hills, Opp. to Tirusulam Railway Station, Opp. to Chennai Air Port, Tirusulam, Meenambakkam, Chennai, Tamil Nadu, India...

https://www.facebook.com/events/711067212280627/?ref_dashboard_filter=hosting&source=1

To save Mother Nature and to grow more trees, we usually collect Tree Seeds and shower on top of hills like Tirusulam Hills, Kodaikanal Hills, Ooty Hills etc. This we call "Tree Seed Showering - Vidhai Abhisegam"... Please participate to save Mother Eath... Earth is our Mother. Sun is our Father. We All One Family

Interested people contact N.Sugavanam - 9176244989, 9445437117 sugagreenservices@gmail.com

Agenda of Program:
1. 9.00 to 12.00 - Seed Collection from various trees at Mylapore
2. 1.00 pm to 2.30 pm - Travel from Mylapore Railway Station - to - Beach Station - to - Tirusulam Railway Station
3. 2.30 pm to 3.00 pm - Assembling near Tirusulam Railway Station for Tree Seed Showering at Tirusulam Hill tops
4. 3.00 pm to 5.00 pm - Tree Seed Showering (Vidhai Abhisegam) on the top of Tirusulam Hills...
All are welcome...
Those who are coming to the program... please send your mobile number, email to : N.Sugavanam - ph:9176244989, 9445437117 Email: nsugavanam@gmail.com


For further details contact:
SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex, Ground Floor, 
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

Thursday, August 21, 2014

உங்கள் தோப்பில் உள்ள மரத்தை வெட்டாமலே விற்கலாம்... மேலும் விவரங்களுக்கு :



உங்கள் தோப்பில் உள்ள மரத்தை வெட்டாமலே விற்கலாம்... மேலும் விவரங்களுக்கு :


We have golden opportunity to invest in Agricultural land at Kodaikanal for Tree Planting.  The land cost is Rs.5 Lakhs per acre. you can take minimum one acre / half acre land.    Interested people contact N.Sugavanam - 9176244989, 9940058497, 9445437117  sugagreenservices@gmail.com  Communicate about how much you can invest? Last date for paying money: 26-Aug-2014
Thanks & Regards

Sugavanam N, M.A., F.I.I.I., MBA
CEO and Chief Strategic Consultant,
SUGA Consulting Services,
Mobile:  Vodafone: 91-91762-44989, 9176871191,  AirTel: 91-9940058497,  
Landline: 91-44-2498-4149

Please visit our Official web site:  www.sugaconsulting.in 

For further details contact:


SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services



Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex, Ground Floor, 
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004



Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

Friday, August 8, 2014

ஒரு மரத்தை நட்டு வளர்ப்பவனுக்கு பத்து கோவில் சென்ற புண்ணியம் கிடைக்கும்




ஒரு மரத்தை நட்டு வளர்ப்பவனுக்கு பத்து கோவில் சென்ற புண்ணியம் கிடைக்கும்

Success... 9 units / each 1/2 acre sold out in Sendurai Project in Dindigul District... Tree Planting Volunteers Required...




Success... 9 units / each 1/2 acre sold out in Sendurai Project in Dindigul District... Tree Planting Volunteers Required...

Tree Planting = Success Unlimited Guaranteed Always = SUGA ....

We are planning Eco trip to Sendurai Village to plant trees at KEVIL Eco Training Centre...

We want Tree Planting Volunteers...

Anybody who is interested to volunteer to do Tree Planting on Saturday and Sundays, please enroll your name with us... Every Month we will arrange for Tree Planting at KEVIL Eco Training Centre, Sendurai Village, Dindigul District...

Tree planting is good exercise... It will burn your extra colories... You need not go to VLCC or other Slimming Centres and Gyms... it will save your money also... It helps everybody in producing Oxygen to the world...

We have golden opportunity to invest in Agricultural land at Kodaikanal for Tree Planting.  The land cost is Rs.5 Lakhs per acre. you can take minimum one acre / half acre land.    Interested people contact N.Sugavanam - 9176244989, 9940058497, 9445437117 sugagreenservices@gmail.com Communicate about how much you can invest? Last date for paying money: 6-Aug-2014
Thanks & Regards

Sugavanam N, M.A., F.I.I.I., MBA
CEO and Chief Strategic Consultant,
SUGA Consulting Services,
Mobile:  Vodafone: 91-91762-44989, 9176871191,  AirTel: 91-9940058497,  
Landline: 91-44-2498-4149

Please visit our Official web site:  www.sugaconsulting.in 

For further details contact:


SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services



Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex, Ground Floor, 
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004


Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room


Thursday, August 7, 2014

We are going Eco Trip to Kodaikanal and Palani on 15th and 16th of Aug. Interested friends contact: N.Sugavanam 9176244989, 9445437117 nsugavanam@gmail.com, ceo@sugaconsulting.in



We are going Eco Trip to Kodaikanal and Palani on 15th and 16th of Aug. 
Interested friends contact: N.Sugavanam 9176244989, 9445437117 nsugavanam@gmail.com, ceo@sugaconsulting.in 
Agenda: 14th Night 8.00 pm - Starting from Chennai 

15th Morning - Reaching Kodaikanal - Planting trees and seeing land forSUGA Green Consulting Services

15-Aug-2014 - Touring at Kodaikanal - Berijam Lake - Bryant Park - Shenbaganur Museum - The Boat Club - Kodaikanal Lake - Coaker's Walk - Guna Cave (Devil's Kitchen) - Kurinji Andavar Temple - Silver Cascade and Bear Shola Falls

16-Aug-2014 - Visiting Palani Temple & Organic Tree Sapling Nursery

16th Night Returning to chennai


https://www.facebook.com/events/700110010068201/?source=1





மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காப்போம்:::




ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,
ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,
மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்.,
ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,
ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.,
இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது...
அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்....,
இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காப்போம்:::
இயற்கையை நம் தலைமுறைக்காக பகிர்ந்து பாதுகாப்போம்...

Sunday, July 27, 2014

A man / woman, who plants and grow a Tree, is the most divine person than any religious person known to me all through the humanity starting from the birth of man in evolution.........




A man / woman, who plants and grow a Tree, is the most divine person than any religious person known to me all through the humanity starting from the birth of man in evolution.........

Saturday, July 26, 2014

Smt. Thimmakka from the state of Karnataka planted 284 banyan trees along a four-kilometre stretch of highway



Smt. Thimmakka from the state of Karnataka, India, is noted for her work in planting and tending to 284 banyan trees along a four-kilometre stretch of highway.
She received no formal education and worked as a casual labourer in a nearby quarry. Her husband was a cattle herder.
The couple used to carry four pails of water for a distance of four kilometres to water the saplings. They were also protected from grazing cattle by fencing them with thorny shrubs.

She has been given the name "Saalumarada" which means Line of trees in Kannada language.

Her work has been honoured with many awards including the National Citizen's Award of India. A U.S. environmental organisation based in Los Angeles and Oakland, California called Thimmakka's Resources for Environmental Education is named after her.


-----------------
We have golden opportunity to invest in Agricultural land at Kodaikanal for Tree Planting.  The land cost is Rs.5 Lakhs per acre. you can take minimum one acre / half acre land.    Interested people contact N.Sugavanam - 9176244989, 9940058497, 9445437117 sugagreenservices@gmail.com Communicate about how much you can invest? Last date for paying money: 6-Aug-2014
Thanks & Regards

Sugavanam N, M.A., F.I.I.I., MBA
CEO and Chief Strategic Consultant,
SUGA Consulting Services,
Mobile:  Vodafone: 91-91762-44989, 9176871191,  AirTel: 91-9940058497,  
Landline: 91-44-2498-4149

Please visit our Official web site:  www.sugaconsulting.in 

For further details contact:


SUGA Green Services,
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services



Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

SUGA Green Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex, Ground Floor, 
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004


Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room